Saturday, March 5, 2022

பாலாக்குழி அறிமுகம்.

பாலைக்குளி என்பது இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது மன்னார், புத்தளம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாகும். இதன் வடக்கே கொண்டச்சியும் கிழக்கே வியாயடி குளமும், வில்பத்து சரணாலயமும் அமைந்துள்ளன. தெற்கே மறிச்சிக்கட்டியும், ஊர்கமமும் அமைந்துள்ளன. அதன் மேற்கே மன்னார் – புத்தளம் வீதியும் உள்ளது.

இது 400 குடும்பங்களைக் கொண்ட கிராமம். இம் மக்கள் தமது வருமானத்தை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் வழியாக பெறுகின்றனர். இவர்களது பிரதான தொழிலாக விவசாய செய்கை காணப்படுகிறது.

2010ம் ஆண்டு நடைபெற்ற முசலி பிரதேசசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்த எம். எச். எம். காமில் நான்காம் இடத்தைப் பெற்று சபை உறுப்புரிமை பெற்றார்.

சுற்றுலாத்துறைக்கு ஒரு சுந்தர பூமி பாலைக்குழி

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமே பாலைக்குழி.

கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியலை தக்க வைக்க நாட்டின் பேசு பொருளாகவும் பல தலைகளுக்கு அரசியல் ஆயுளை அதிகரிக்க செய்த பிரதேசமும் இதுவாகும்.

பொன்பரப்பியின் மருங்கிலும் அழகிய வில்பத்தின் அண்மையிலும் அமையப்பெற்ற இக்கிராமம் முஸ்லிம்கள்  பூர்வீகமாக வாழ்ந்த வாழும் பகுதியாகும்.

கடல், கரை ,காடு ,நதி, கனிமம் என எல்லா வளங்களும் கொட்டி கிடக்கும் ஒரு சொர்க்கபுரி.டச்சு  கால கடற்கரை கோரி,கொழும்பு மன்னார் வீதி இலவங்குளம் ஊடாக போன்ற வரலாற்றை பறை சாற்றும் சுவடுகளும் ஏராளம்.

கடல் வளம் கொழிக்கும் இப்பகுதியின் கடற்கரை சுத்தமான மாபிள் கடற்கரையை கொண்டதாகும்.

வியாயடித்தேக்கம் ,அதற்கான காபட் பாதைகள் ,இரு மருங்கிலும் காணப்படும் அளைகள்,குட்டிக்குட்டி குளங்கள் இந்த பிரதேசத்தின் அழகை மேலும் முறுக்கேற்றுகிறது.

என்ன துரதிஷ்டவசமானது இந்த பகுதி இன்னும் அரசியல் தலைமைகளுக்கும்,தேசத்திற்கும் தீண்டாமையாகவே இருக்கிறது.

நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் தலைமைகள் கட்டாயமாக இந்த பிரதேசத்தை சுற்றுலாத்துறையின் சொர்க்கபுரியாக மாற்ற முன்வர வேண்டும்.

Tuesday, January 15, 2019

அல்ஹிக்மா பாலர் பாடசாலையின் இறுதி வருட மாணவர்களை வெளியேற்றும் நிகழ்வு.

முசலி தெற்கின் அமைந்துள்ள பாலைக்குழி கிராமத்தில் அமைந்துள்ள அல்ஹிக்மா பாலர் பாடசாலையில் 2018ம் ஆண்டில் கல்வி கற்ற  மாணவர்களுக்கான கெளரவித்தலும், 2019ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அறிமுகம்

Wednesday, July 25, 2018

பாலைக்குழிக்கு செல்லும் பிரதான பாதைக்கான பெயர் பலகையினை நாட்டப்பட்டது.

மறிச்சிக்கட்டியில் இருந்து பாலைக்குழிக்கு செல்லும் பிரதான பாதைக்கான பெயர் பலகையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் சேகு சுல்தான் ஜெமீல் தனது சொந்த நிதியிலிந்து அவர்களால் நேற்று (25/07/2018) அன்று நாட்டி வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பாலைக்குழி மஸ்ஜிதுல் ஹைராத் பெரிய பள்ளி தலைவர் முஸ்தபா முஹாசிம் மற்றும் முன்னால் முசலி பிரதேச சபை உறுப்பினர் ஹமீதுமரைக்கார் காமில் ஆகியோர் கலந்துகொண்டனர். (படஙகள் இணைப்பு )

Friday, May 6, 2016

ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.

சலீம் பைரூஸ்.

மறிச்சிக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையில் இருந்து சிலாவத்துரை பாடசாலைக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.
மறிச்சிக்கட்டியின் கல்வி வழச்சிக்கு பெறும் பங்காற்றியதை நன்றி

Monday, May 2, 2016

பாலைகுளி மாணவர்களின் கல்வி

மன்னார் மாவட்ட முசலி பிரதேசத்தின் மறிச்சுக்கட்டியில் அமைந்துள்ள பாலைக்குளி என்னும் கிராமத்தின் ஆரம்ப பாடசாலை 125மாணவர்களுடன். ஒரே ஒரு கட்டிடத்தில் இயங்கி வருதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

Saturday, February 20, 2016

ஒன்பது மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கான ஒன்றுகூடல்

ஒன்பது மாகாண  சபைகளின் முதலமைச்சர்களுக்கான ஒன்றுகூடல் நேற்று மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் ஏக்க நாயக்க தலைமையில் கண்டி ஒக்ரே ரேஜன்ஷி ஹோட்டலில் நடை பெற்றது .

இக்கலந்துந்துரயாடலுக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டும் கலந்து கொண்டு கல்வி தொடர்பான முன்னேற்ற விடயங்களை சுட்டிக்காட்டி அதற்கான வழிகளை எவ்வாறு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது .

பலஸ்தீன் மஸ்ஜிதுல் இப்றாஹிம் என்ற பிரதேசத்தில் வைத்து இஸ்ரேலி கொடிய மிருகங்களால் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் .

2016. 02 . 20. இன்று பலஸ்தீன் மஸ்ஜிதுல் இப்றாஹிம் என்ற பிரதேசத்தில் வைத்து இஸ்ரேலி கொடிய மிருகங்களால் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் .

இஸ்ரேலிய மிருகங்கள் இப்படியான  சிறுவர்களையும் இளைஞர்களையும்  வீடுகள் புகுந்து கைதுசெய்து வருவதாக சில ஊடகங்கள் கருத்து தெரிவித்fதுள்ளது .

Whatsapp அறிமுகப்படுத்தும் புதிய வசதி!


உலகமெங்கும் Whatsapp பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் அந்த எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. பெரும்பாலும், Smartphone பயன்படுத்துபவர்களே Whatsapp ஐ அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அதுவும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏராளமன  குரூப்களை உருவாக்கி அதில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.முக்கியமாக, இந்தியாவில்தான் அதிமான குழுக்கள் Whatsapp இல் செயல்படுவதாகவும், ஏராளமான புகைப்படங்கள் Share செய்யப்படுவதாகவும் Whatsapp ஐ உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் கவோம் கூறியுள்ளார்.

Friday, February 19, 2016

சர்க்கரை நோய்கான பத்து அறிகுறிகள்!

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம்.