
சமூக நீதிக்கான தேசிய சபை கடந்த 23.12.2014 அன்று பிடகொட்டே சொலிஸ்
ஹோட்டலில் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் ஸ்தாபகர்
மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஐ. தே. க.
தலைமைத்துவ சபை தலைவர் கரு ஜயசூரிய, ஐ.தே.க. உப தலைவர் ரவி கருணாநாயக்க,
தூய நாளைக்கான தேசிய சபையின் ஸ்தாபகர் அதுரலியே ரதன தேரர் , ஜாதிக ஹெல
உறுமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சட்டத்தரணி ஷிரால் லக்திலக, NFGG இன்
பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் மற்றும் NFGG இன் பொருளாளர் இம்தியாஸ் வஹாப்
ஆகியோர் உட்பட பல பிரமுக்கர்கள் கலந்து சிறப்பித்தனர்.