Saturday, November 1, 2014

புத்தளம் வாழ் வடமாகாண முஸ்லிம்கள் அமைதி போராட்டம்

ரூசி சனூன் புத்தளம்
DSC052181990 ம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியையொட்டி  அஹிம்சை வழியிலான கவனயீர்ப்பு அமைதி போராட்டம் வெள்ளிக்கிழமை (31) ஜும்மா தொழுகையை தொடந்து புத்தளம் தில்லையடி ரத்மல்யாய பிரதான வீதியில் இடம்பெற்றது.
வடக்கு முஸ்லிம்களின் நலன்களுக்கான அமைப்பு இந்த அமைதி போராட்ட நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு சுலோகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு  புத்தளம் மாவட்டத்தில் வதியும் வடமாகாண முஸ்லிம்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
மூன்று அம்சக்கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. 1990 ம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை விசாரிப்பதற்கென ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயக பூமியில் சுதந்திரமாக வாழ வழி வகுக்கப்பட வேண்டும். வட மாகாண அரச நியமனங்கள் முஸ்லிம்களுக்கும் பாகுபாடின்றி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளே அங்கு முன்வைக்கப்பட்டன.

DSC05208
DSC05209DSC05210
http://puttalamonline.com/wp-content/uploads/2014/11/DSC05215.jpg