அதேசமயம் ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை முதலமைச்சர் வேட்பாளராக ஆளுங்கட்சி நியமிக்க வேண்டுமென மற்றுமொரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த இருவரும் மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதால் ஆளுங்கட்சிக்குள் இது விடயத்தில் கடும் பனிப்போர் உருவாகியுள்ளது.
தேர்தல் களத்தில் இறங்கும் முதற்கட்ட வேலையாகவே கடந்த வாரம் முதல் கே.பி. மக்களுடன் நெருங்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னணி காரணமாகவே கே.பி. எதுவித குற்றமற்றவர் என அரசின் முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.