Wednesday, September 5, 2012

மரிச்சுக்கட்டு வீடுகள் தீக்கிரை சம்பவத்தின் பின்னணியில் நிர்மாண ஒப்பந்தக்காரர்: கடற்படை குற்றச்சாட்டு


மன்னார் மரிச்சுக்கட்டு பிரதேசத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களின் தற்காலிக வீடுகள்; தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், முஸ்லிம்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்ற ஒருவரே உள்ளதாக கடற்படையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வீடுகள் திங்கட்கிழமை இரவு தீவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  



மரைச்சிகட்டுவ பகுதியில் அனுமதியளிக்கப்படாத நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு ஒப்பந்தக்காரர் ஒருவர் முயற்சித்தபோது, சட்ட ஆவணங்கள் இல்லாவிட்டால் அங்கிருந்து வெளியேறுமாறு அவரை கடற்படையினர் கோரியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஒப்பந்தக்காரர் அக்கிராமத்திற்கு சென்று வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் கடற்படையினர் மீது குற்றம் சுமத்த முற்படுகின்றனர். ஆனால் கடற்படையினர்தான் தீயை அணைத்தனர் என கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
e